Showing posts with label Vaazhi Thirunaamam. Show all posts
Showing posts with label Vaazhi Thirunaamam. Show all posts

AandaaL vaazhi thirunaamam (ஆண்டாள் வாழித் திருநாமம்)

கமலமுடன் வில்லிபுத்தூர் விளங்கவன்தாள் வாழியே!

காரார் நற்றுழைக்கானத் தவரித்தல் வாழியே!

விமலமாம் திருவாடிப் பூரத்தாள் வாழியே!

விட்டுசித்தன் வளர்தெடுத்த இளங்கிழையாள் வாழியே!

அமலத் திருப்பாவை ஐயாறு அளித்தருள்வாள் வாழியே!

ஆக நூற்றெண்ணைந்து மூன்றுரைத்தாள் வாழியே!

அமுதனாம் அரங்கனுக்கே மாலையிட்டாள் வாழியே!

ஆண்டாள் தம் இணையடிகள் அனவரதம் வாழியே!

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே!


திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!


பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே!

பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!

ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!

உயரரங்கற்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே!

மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே!

வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே!




kamalamuDan villiputtUr viLa’ngavandAL vAzhiyE!
kArAr naRRuzhAikkAnat tavadarittAL vAzhiyE!
vimalamAm tiruvADip pUrattAL vAzhiyE!
viTTucittan vaLartteDutta iLa’nkizhaiyAL vAzhiyE!
amalat tiruppAvai aiyARu aLittaruLvAL vAzhiyE!
Aga nURReNNaindu mUnRuraittAL vAzhiyE!
amudanAm ara’nganukkE mAlaiyiTTAL vAzhiyE!
ANDAL tam iNaiyaDigaL anavaratam vAzhiyE!
tiruvADipUrattu jagattudittAL vAzhiyE!
tiruppAvai muppadum SeppinAL vAzhiyE!
periyAzhvAr peRReDutta peN piLLAi vAzhiyE!
perumpudUr mAmunikkup pinnAnAL vAzhiyE!
oru nURRu nARpattu mUnRuraittAL vAzhiyE!
uyar ara’ngaRkE kaNNi ugandaLittAL vAzhiyE!
maruvArum tirumalli vaLa nADi vAzhiyE!

vaN puduvai nagark kOdai malarppada’ngaL vAzhiyE!


அஞ்சுகுடிக் கொருசந்ததியாய் ஆழ்வார்கள்

தஞ்செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய்ப் - பிஞ்சாய்ப்

பழுத்தாளை யான்டாளைப் பத்தியுடன்நாளும்

வழுத்தாய் மனமேமகழிந்து.


anjukkudik korusanthathiyaai aazhwargal
thanseyalai vinjinirkkum thanmayallai - pinjaaip
pazhuthaalai yaandaalaip pathiyudannaalum
vazhuthaai manamemagzhinthu.