Kolam 30 - எங்கும் திருவருள் பெற்று


அதிரும் அலைகடலோசை
எங்கும் அலற
அந்தரத்தமரர்கள், இந்திரன்,இராக்கதரும்
களைப்படைய
கூர்மமாய் மந்தார மலை தாங்கி
பாற்கடல் கடைந்து
மாதவனாய்,கேசவனாய்
ஓங்கி நின்ற அம்மானே!

முன் கண்ணனாய் அவதரித்து
இக்கலியுகமும் அர்ச்சையாய்
வந்திறங்கிய
அரங்கதரவிணனை
அம்மா!

கோதையை ஆண்டாளாக
ஆட்கொண்டு உயர்வித்த
அரங்கா!

கோதை காட்டிய பாதையில்
முப்பதும் கற்பவற்கு
எங்கும் என்றும்
திருவருள் பெற்று
இன்புற அடியோமும்
நின் தாளினை படிந்தோம்
இம் மார்கழியில்



கோதாம் அநந்ய சரணம்





1 comment:

  1. Aandal mugam has come out very well when compared to Krishna.

    ReplyDelete