Kolam 23 - பூவை பூ வண்ணா


உறக்கம் விட்டொழித்தது
இரு சிறகு உதறி அன்னம்
பேருறக்கம் ஒழித்தோம்
நாமும் பாவை நோன்பிற்காக

உறங்கும் சீரிய சிங்கம் போல்
வேரி மயிர் உதறி,அறிவுற்று, விழித்து
நின் விழி நோக்கி ஏங்கும்

எம் உள்ளத்தை
அமர்ந்து ஆராய
அரு வரைய கோயிலினின்று
பூப்போன்று வாராயோ?




No comments:

Post a Comment