Kolam 17 - அம்பரம் ஊடு அறுத்து


அம்பரத்தில் இருள் அகன்றது
அம்பரமும் பாரும்
அவகாசமில்லா நின்றது

அம்பரமும்,அருநீரும்,அன்னமும்
அறம் செய்யும்
ஆச்சார்யனுக்கும், அசோதைக்கும்
அடி பணியும் பலதேவனுடனும்

அகலகில்லா தொடர்பு கொண்ட
அம்பரம் ஊடு அறுத்த
அரங்கா!

ஆயர்பாடி ஆய்ச்சியாகி
அணுகினோம் உன்னை
ஆசையுடன்.
கோதாம் அநந்ய சரணம்






No comments:

Post a Comment