Kolam 28 - புண்ணியம் யாமுடையோம்


பசும் பொழில் கமுகின்
மடலிடை கீறி
ஆயர் குல வேந்தே !
நின் வேய்ங்குழல் ஓசை
திசை பரந்தன

கறவைகள் பின் செல்வோம்
அறிவும் ஒன்றும் இல்லை
மற்றொன்றும் அறியாத
ஆய்ச்சியர் நாங்கள்

கபிலை கண்டெழுந்த
குறையொன்றும் இல்லாத கோவிந்தா!
குற்றம் காணாமல்
எம் குறைகளையும் பொறுத்து
குழல் இனிமையுடன்
பறை தாராயோ?





No comments:

Post a Comment